சரவணன் பைக்கை அடித்து நொறுக்க திட்டம் போட்டுள்ளார் ஆதி.
Raja Rani 2 Episode Update 14.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. அம்மாவை கூட்டிக்கொண்டு சரவணன் பைக்கில் சென்றதால் வீட்டில் உள்ள அனைவரும் பதற்றத்தோடு சரவணன் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். சரவணன் ஸ்டைலாக பைக்கை ஓட்டி வந்து அனைவருக்கும் ஷாக் கொடுக்கிறார். அதன் பின்னர் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சரவணனை பாராட்டுகின்றனர். சரவணன் வண்டியை ஓட்ட மாட்டார் என கூறிய ஆதிக்கு பல்பு தான் கிடைத்தது.
அதன் பின்னர் இரவு சந்தியா சரவணனுக்கு லைசன்ஸ் வாங்குவதற்கு சில விஷயங்களைத் தெரிந்து இருக்க வேண்டும். அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் கூற வேண்டும் என கூறி என்னென்ன கேள்விகள் கேட்பார்கள் என்பதை சொல்லிக் கொடுக்கிறார். இதற்கிடையில் ஆதி சரவணனின் பைக்கை கல்லெடுத்து அடித்து உடைக்க முயற்சி செய்கிறார். அந்த நேரத்தில் பார்வதி வெளியே வர சிக்கிக்கொள்கிறார் ஆதி. உடனே கல்லை தூக்கிப் போட்டு விடுகிறார். சந்தேகத்துடன் பார்வதி இங்கே என்ன செய்கிறார் என கேட்க எதையோ கூறி சமாளித்து கொள்கிறார்.
பின்னர் மறுநாள் காலை சிவகாமி கடைக்கு கிளம்பிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சரவணன் லைசென்ஸ் வாங்க செல்வதாக கூறுகிறார். வழக்கம்போல் ஆதி லைசென்ஸ் எல்லாம் அவ்வளவு ஈசியாக வாங்கிட முடியாது என சரவணனை கிண்டலடிக்கிறார். இவ்வளவு நாளாகியும் லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டிட்டு இருக்க. நான் கேட்கிற சில கேள்விகளுக்கு பதில் சொல் என சந்தயா சில கேள்விகளை கேட்கிறார். ஆனால் பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கிறார் ஆதி.
என்னோட அப்பா அந்த கல்யாணத்துக்கு Okey சொல்லல – Sanchita Shetty Emotional Speech..!
பின்னர் சந்தியா சரவணனிடம் சில கேள்விகளை கேட்க டக்கென பதில் சொல்கிறார் சரவணன். மீண்டும் பல்பு வாங்குகிறார் ஆதி. அதன் பின்னர் பார்வதி ஆதி இடம் நீ செய்வது எதுவும் சரியில்லை. எதுக்கு சரவணன் அண்ணன் கிட்ட இப்படி பேசுற என கேட்கிறார். அவர் அண்ணி சொன்னதைக் கேட்டு நடக்கிறாரு அது எனக்கு பிடிக்கல என கூறுகிறார். சந்தியா நீ நினைக்கிற மாதிரி கெட்டவங்க இல்ல பார்வதி கூறுகிறார். நீ படிக்கணும்னு சொன்ன போது அவங்க தானே பணம் கட்டினாங்க, லேப்டாப் வாங்கி கொடுத்தாங்க என கூற நீ எப்ப அவங்க பக்கம் தாவின என ஆதி கேட்கிறான். அவங்க நல்லவங்க என்று தெரிந்ததும் நான் அவங்கள புரிஞ்சிக்கிட்டேன் என பார்வதி கூறுகிறார். அப்படி என்ன பண்ணிட்டாங்க என ஆதி கேட்க எனக்கு தோணினது சொன்னேன் எனக் கூறி அங்கிருந்து கிளம்பி விடுகிறார் பார்வதி.
பின்னர் லைசென்ஸ் வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்த சரவணனுக்கு சந்தியா ஒரு விஷயம் சொல்லப் போவதாக கண்ணை மூட சொல்கிறார். சரவணன் கண்ணை மூட இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட்.