போலீசாக போகும் சந்தியாவுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் அர்ச்சனா கலெக்டராகி சந்தியாவை கொடுமைப்படுத்துவது போல கனவு காண்கிறார். மறுநாள் காலையில் சந்தியா சிவகாமி போலீசாக சம்மதம் தெரிவித்ததால் ஸ்வீட் செய்து எல்லோருக்கும் கொடுத்து கொண்டாடுகிறார்.
இந்த நேரத்தில் சிவகாமியின் மாமியார் வீட்டுக்கு வர அவரை பார்த்து அனைவரும் உற்சாகமாக வரவேற்க பின்னர் சந்தியாவின் கையில் இருக்கும் தட்டை பார்த்து எனது கேட்க சிவகாமி பட எல்லோரும் போலீசாக போவதை சொல்ல வேண்டாம் என்று சொல்ல அர்ச்சனா அந்த விஷயத்தை போட்டு உடைக்கிறார்.
இதனால் அதிர்ச்சியான சிவகாமியின் மாமியார் சிவகாமியையும் சந்தியாவையும் பிடித்து கண்டபடி திட்டுகிறார். சரவணன் சின்ன வயசுல வேலைக்கு அனுப்பி சம்பாதிக்க வச்ச இப்போ சந்தியாவையும் வேலைக்கு அனுப்பி சம்பாதிக்க பாக்குறியா உனக்கு குடும்பத்தோட நிம்மதியை விட பணம் தான் முக்கியமா போச்சு என சிவகாமியை திட்டுகிறார்.
இதுக்கு யாரு சம்மதம் தெரிவித்திருந்தாலும் சரி நான் சம்மதிக்க மாட்டேன் என கூற அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அர்ச்சனா சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.