சரவணனுடன் பிளைட்டில் பறக்க உள்ளார் சிவகாமி.
Raja Rani 2 Episode Update 12.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்த சரவணனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க எல்லோரும் திட்டமிட்டிருந்த நிலையில் அவருடைய அப்பா உளறி விடுகிறார். பிறகு சரவணன் எல்லாரும் சேர்ந்து ஏதோ திட்டம் போட்டுத்தான் என்னை கண்டுக்காமல் இருந்தீங்களா என கேட்க சிவகாமி தன்னுடைய கணவரை திட்டுகிறார். பிறகு அனைவரும் சரவணனுக்கு வாழ்த்து கூறுகின்றனர். சிவகாமி கண்கலங்கியபடி சரவணனை கட்டியணைத்து பெருமைப்படுகிறார்.
அவர் பிறகு மயிலை லட்டு எடுத்துட்டு வர சொல்லி ஊட்டி விடுகிறார். பிறகு சந்தியாவை அழைத்து அவருக்கு முத்தம் கொடுக்கிறார். பிறகு சந்தியாவிற்கு நிகழ்ச்சி குழுவினரிடம் இருந்து ஒரு மெசேஜ் வருகிறது. சரவணனுடன் பைனலுக்கு 3 பேர் வரலாம் என சொல்லப்படுகிறது. அதுவும் அவர்கள் நான்கு பேருக்கும் ஃப்லைட் டிக்கெட் நிகழ்ச்சி குழுவினரே போட்டுத் தருவார்கள் எனவும் மெசேஜ் வருகிறது.
இந்திய ஹாக்கி அணிக்கு, தலைமை தாங்குகிறார் 21 வயது இளைஞர்
அதன் பிறகு இந்த விஷயத்தை சந்தியா வீட்டில் சொல்ல நான் வருகிறேன் நான் வருகிறேன் என அனைவரும் போட்டி போடுகின்றனர். கடைசியில் சரவணன் அப்பா அம்மா சந்தியாவை கூட்டிக் கொண்டு செல்வதாக கூறுகிறார். அதற்காக சந்தியா பெயரை பதிவு செய்ததும் நான்கு பேருடைய போட்டோ கேட்கிறது. பிறகு நால்வரும் ரெடியாயிட்டு கடைக்குச் சென்று போட்டோ எடுத்துக் கொள்கின்றனர்.
இந்தப்பக்கம் அர்ச்சனா பிளைட்டில் போகமுடியாமல் போயிடுச்சே என புலம்பிக் கொண்டிருக்கிறார். ரூமில் அர்ச்சனா புலம்ப செந்தில் வந்து ஆறுதல் சொல்ல அதையும் கேட்காமல் புலம்புகிறார். இதனால் சத்தமில்லாமல் செந்தில் அங்கிருந்து எழுந்து சென்றுவிட அர்ச்சனா தனியாக புலம்பிக் கொண்டிருக்கிறார்.
போட்டோ எடுக்க நால்வரும் ஸ்டூடியோவுக்கு வந்ததையடுத்து சந்தியா அனைவருக்கும் சந்தியா முக அலங்காரம் செய்து விடுகிறார். பிறகு நால்வரும் தனித்தனியாக போட்டோ எடுத்துக் கொள்கின்றனர். அதன் பிறகு அனைவரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என சந்தியா கேட்க சிவகாமி சம்மதம் சொல்கிறார். பிறகு சிவகாமியை கூட்டிச் சென்று அவரை மீண்டும் அலங்காரம் செய்து அழைத்து வருகிறார் சந்தியா.
பின்னர் நால்வரும் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்கின்றனர். அப்போது சந்தியாவிற்கு தன்னுடைய அப்பா அம்மாவின் நினைவு வந்து அவர் கண் கலங்குகிறார். வெளியே வந்து அவர் கண் கலங்குவது பார்த்த மாமனார் என்ன ஆச்சு என கேட்கிறார். அப்பா அம்மாவின் ஞாபகம் வந்துவிட்டது என அவர் கண் கலங்கி தன்னுடைய மாமனார் மாமியாரிடம் மன்னிப்பு கேட்கிறார். உனக்கு நாங்க தான் அப்பா அம்மா என மாமனார் சமாதானம் செய்கிறார். சிவகாமியும் சந்தியாவின் கண்ணை துடைத்து விட்டு அவருக்கு ஆறுதல் கூற அத்தையை கட்டி அணைத்து கண் கலங்குகிறார் சந்தியா.
பிறகு சரவணன் என்னங்க எதுவும் சொல்லாமல் திடீர்னு அழுதுட்டீங்க நான் பதறிப் போயிட்டேன் என சரவணன் கூற சந்தியா மன்னிப்பு கேட்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி சீரியல் எபிசோட்.