விபத்தில் சிக்கிய சிறுவனுக்கு உதவி செய்ய போய் சிக்கலில் சிக்கியுள்ளனர் சந்தியா சரவணன்.

Raja Rani 2 Episode Update 09.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சந்தியாவும் சரவணனும் ஜூஸ் குடித்து கொண்டே பர்ஸ்ட் ரவுண்டில் ஜெயித்தது குறித்து பேசி கொள்கின்றனர். அடுத்தடுத்த ரவுண்டுலயும் நீங்க கண்டிப்பா ஜெயிப்பீங்க என சொல்ல சரவணன் இதுக்கெல்லாம் நீங்க தான் காரணம் என சரவணன் சொல்கிறார். இருப்பினும் டென்ஷன் வேண்டாம் என சந்தியா ஊக்கப்படுத்துகிறார். சென்ட் தாமஸ் மவுண்ட் போகணும்னு சரவணன் சொல்ல சந்தியா அங்க போயிட்டு ஊருக்கு போகலாம் என சொல்கிறார்.

இன்று சூரசம்ஹாரம் : மௌன விரதம் மிகச்சிறப்பாகும்.!

பிறகு சரவணன் நாலு நாளுக்கு மேல சென்னையில இருக்க முடியாது என சொல்கிறார். ஒரே சத்தமாக சவுண்டமா இருக்கு என சொல்ல சந்தியா சென்னையின் புகழை எடுத்து கூறுகிறார். விட்டா சென்னைக்கு வந்துடுவீங்க போல என சரவணன் சொல்ல நேரம் வந்தா வந்து தானே ஆகணும் என சொல்கிறார். சந்தியா இந்த போட்டியில் நீங்க ஜெயிச்சு மூணு லட்சம் சம்பளம்னு ஒரு ஸ்டார் ஹோட்டல்ல வேலை கிடைச்சா வர மாட்டிங்களா என சந்தியா கேட்க முதல்ல அதெல்லாம் நடக்கட்டும் என சரவணன் சொல்கிறார்.

ஒரே அடிதான் உனக்கு.., Anchor-ஆல் கடுப்பான KPY Dheena..! | Velavan Stores | Fun Shopping | T Nagar HD

இந்த நேரத்தில் ஒரு சிறுவன் மீது கார் ஒன்று மோதி விபத்துகுள்ளாகி விடுகிறது. சந்தியாவும் சரவணனும் உதவி செய்கின்றனர். சந்தியா ஹாஸ்பிடலுக்கு வழி அனுப்பி விட்டு அந்த காரை பின் தொடர்ந்து செல்கிறார். உனக்கு எதுக்கு மா இந்த தேவையில்லாத வேலை என அந்த ஆட்டோ ட்ரைவர் கேட்க சந்தியா என்னால முடிந்ததை செய்கிறேன். அவனை விட கூடாது என ஆட்டோவை பின் தொடர்கிறார். போலீசுக்கு தகவல் கொடுக்கிறார். அதற்குள் அந்த கார் மாயமாகி விட சந்தியா அந்த காரை தேடி அலைகிறார். ஒரு வழியாக கார் கண்டுபிடிக்கப்படுகிறது.

பிறகு சந்தியா சரவணனுக்கு போன் செய்து அந்த கார் காரன் வீட்டு வாசல்ல இருக்கேன் என சொல்கிறார். சரவணனை அந்த இடத்திற்கு வர சொல்கிறார். அதற்குள் சந்தியா அந்த வீட்டின் உள்ளே செல்கிறார். சரவணன் சந்தியா இருக்கும் இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறார். சந்தியா வீட்டின் காலிங் பெல் அடிக்க ரவுடிகள் அவரை ரவுண்டு கட்டி விடுகின்றனர். ரவுடிகள் சந்தியாவை தாக்க சந்தியா பதிலுக்கு தாக்க இந்த நேரத்தில் சரவணன் வந்து ரவுடிகளிடம் சண்டை போடுகிறார். பின்னர் போலீஸ் வந்து ரவுடிகளை கைது செய்கின்றனர்.

பிறகு கமிஷனர் உங்களிடம் பேச வேண்டும் என சொன்னதாக போலீஸ் போனை கொடுக்கிறார். சென்னை வரைக்கும் போய் ஒரு குற்றவாளியை கண்டு பிடிச்சு இருக்கீங்க என பாராட்டுகிறார். அவங்க கஞ்சா கடத்துற ஆளுங்க என கூறுகிறார். போலீஸ் செய்ய வேண்டிய வேலைய நீங்க செய்து இருக்கீங்க என பாராட்டுகிறார். நீங்க போலீஸ் டிபார்ட்மென்ட்ல இருக்க வேண்டிய ஆளு என கூறுகிறார். போலீஸ் டிபார்ட்மென்ட்ல சேர ஆசை இருந்தா எப்ப வேண்டுமானாலும் என்னை வந்து பாருங்க என கூறுகிறார்.

பிறகு சந்தியாவும் சரவணனும் போட்டிக்கு லேட் ஆகிடுச்சு என அவசரமா கிளம்பி வருகின்றனர். போட்டியின் நடுவர்களை வந்து விட இன்னும் சந்தியா சரவணனை காணவில்லை. போட்டியாளர்கள் ஒவ்வொருவராக போட்டிக்கு அழைக்கப்படுகின்றனர். ஐந்து நிமிடத்தில் வரவில்லை என்றால் போட்டியில் கலந்து கொள்ள முடியாது என சந்தியாவுக்கு போன் வருகிறது.

தொகுப்பாளர் சரவணனை மேடைக்கு அழைக்கிறார். ஆனால் சரவணன் அங்கு இல்லாததால் மீண்டும் மீண்டும் அவரது பெயரையோ கூறுகின்றனர். ஐந்து நிமிடத்தில் வந்து விடுவார்கள் என சரத் கூறுகிறார். குறிப்பிட்ட நேரத்தில் இவர்கள் போட்டியில் பங்கேற்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 எபிசொட் அப்டேட்.