சந்தியாவை அசிங்கப்படுத்த புதுக் கூட்டணி அமைத்துள்ளார் அர்ச்சனா.
Raja Rani 2 Episode Update 07.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. கோவிலில் காலில் அடிபட்டால் அபசகுனமாக நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே வீட்டிற்கு வருகிறார் சிவகாமி. சிவகாமி நொண்டி வருவதை பார்த்து பதறிய மயிறு அவரை அமரவைத்து காலுக்கு மருந்து போட்டு விடுகிறார். அதன் பிறகு சரவணனிடம் பேச வேண்டும் என சரவணனுக்கு ஃபோன் செய்கிறார்.
உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்ப வசதிகள் வழங்கப்படும் : அமித் ஷா உறுதி
இந்த பக்கம் சந்தியா சர்ப்ரைஸாக எல்லோரையும் வர வைத்து தனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்ததற்காக அவரை தூக்கி சுற்றி சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார் சரவணன். எனக்காக என் மனசு புரிஞ்சுகிட்டு நீங்க இப்படி செய்வீங்கனு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல்ல. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என சரவணன் கூறுகிறார். உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள் கண்டிப்பா நான் தரேன் என சரவணன் கேட்க எனக்கு ஒன்னும் வேண்டாம் இந்த போட்டியில் நீங்க ஜெயிக்கணும் என கூறுகிறார். நீங்க என் கூட இருக்க வரைக்கும் நான் கண்டிப்பா ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு வந்துடுச்சு என சொல்கிறார். பிறகு சந்தியா சரவணனை கட்டியணைத்து அன்பை பரிமாற அந்த நேரத்தில் போன் அடிக்கிறது.
Birthday Celebration Of Thieyash Sai & Shaviya Sai – S/O Manager To Vishal!
வீட்டிலிருந்து தான் போன் என போனை எடுக்கிறார் சந்தியா. மயில் பேச நலம் விசாரிக்கிறார் சந்தியா. பிறகு நான் நல்லா இருக்கேன் அம்மாவுக்கு தான் என மயிலு காலில் அடிபட்ட விஷயத்தை சொல்ல வர சிவகாமி அதை தடுத்து விடுகிறார். பிறகு மயிலிடம் இருந்து போன் வாங்கி நலம் விசாரிக்கிறார். சரவணன் நீங்கள் எப்படி இருக்க என்ன ஏது என நலம் விசாரித்து பேசுகிறார். சரவணன் மைதிலி ஏதோ சொல்ல வந்தா நீங்க ஏதோ மறைக்கறீங்க என்ன என கேட்கிறார். சிவகாமி அதெல்லாம் ஒண்ணுமில்ல வர வழியில வண்டில உன்ன மாதிரியே போட்டு பார்த்தேன் எனக்கு உன் ஞாபகம் வந்துடுச்சு. அத அவ கிட்ட சொல்லிகிட்டு இருந்தேன் அது தான் சொல்ல வந்த வேற எதுவும் இல்லை என கூறுகிறார். பிறகு சரவணன் நீங்க இல்லாததுதான் ஒரு வருத்தம் மற்றபடி இங்கே எல்லோரும் சந்தோஷமாக இருக்கோம் என கூறுகிறார். பிறகு சிவகாமி சந்தியாவிடம் சரவணனை பத்திரமாக பார்த்துக்கோ. சின்ன சின்ன விஷயத்துக்கு கூட கவனமாய் இருங்கள் என கூறுகிறார். வீட்ல இருக்க எல்லோர்கிட்டையும் இதை சொன்னேன்னு சொல்லிடு என சொல்கிறார்.
பாஸ்கர் ஆபீசுக்கு செல்ல அவர் பார்வதியோடு வெளியே செல்வார் என திட்டத்தோடு பின்தொடர்கிறார் விக்கி. ஆனால் பாஸ்கர் பார்வதி வீட்டுக்கு போகாமல் நேராக ஆபீசுக்கு செல்லும் வழியில் போவதால் உடனே அவருக்கு போன் போட்டு கேட்க பார்வதி சரவணன் கலந்துகிற சமையல் போட்டிக்காக சென்னை போயிருக்கா, அதனால இன்னைக்கு வெளிய போகல என கூற விக்கி போட்ட திட்டமெல்லாம் நாசமா போச்சு என கடுப்பாகிறார்.
இந்த பக்கம் அர்ச்சனாவுக்கு அவரது தங்கச்சி போன் செய்து உனக்கு என் ஞாபகம் கொஞ்சமாச்சும் இருக்கா இல்லையா நான் பாஸ்கரை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். அதுக்காக இதுவரைக்கும் நீ எதற்கு செஞ்சியா என கேட்க நான் காய் நகர்த்தியது தான் இருக்கேன் ஊருக்கு வந்ததும் முழு வேலையா இறங்கி விடுவேன் என கூறுகிறார். அப்போ நீ ஊர்ல இல்லையா எனக் கேட்க சரவணன் கலந்திருக்கிற சமையல் போட்டிக்கு வந்திருக்கும் என கூறுகிறார். சந்தியா உயிருக்கான எனக் கேட்க ஆமாம் என சொல்கிறார் அர்ச்சனா அப்ப போய் நீ குடும்பத்தோடு ஜாலியா இரு என கோபப்படுகிறார் அர்ச்சனாவின் தங்கச்சி. பிறகு அவரிடம் நான் இங்க போட்டியை பார்க்க வரல. சரவணன் எப்படியாவது இந்த போட்டில தோற்க வைக்கணும். அது சந்தியாவிற்கு பெரிய அசிங்கமா போயிடும். அத வச்சி வீட்ல பெரிய பிரளயத்தையே உண்டு பண்ணுவேன் என கூறுகிறார்.
இதையெல்லாம் ஒட்டு கேட்ட ஷல்மா அர்ச்சனாவுடன் கூட்டு சேர்ந்து விடுகிறார். சந்தியா தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக ஷல்மா கூறுகிறார். அவள அசிங்கப்படுத்தணும், அதுக்காக நான் எந்த லெவலுக்கு வேணாலும் போவேன் என கூறுகிறார். அதுல நசிக்கிடுவோம் என அர்ச்சனாவும் கூட்டுச் சேர்ந்து கொள்கிறார்.
இந்தப் பக்கம் போட்டியாளர்கள் அனைவரும் போட்டிக்காக காத்துக் கொண்டிருக்க சரவணன் மட்டும் இன்னும் வராதது பற்றி பேசுகின்றனர். ஷல்மா அவங்களுக்கு மட்டும் ஸ்பெஷல். ஆரம்பத்தில் இருந்தே நிறைய சலுகைகள் கொடுக்கிறாங்க இன்னைக்கும் அந்த மாதிரி ஏதாச்சும் பண்ணா நான் சும்மா இருக்க மாட்டேன் என கூறுகிறார். போட்டி சரியா நேர்மையா நடக்கணும் என சல்மா கூறுகிறார். இந்த நேரத்தில் சரவணன் குடும்பத்தார் வந்துவிடுகின்றனர்.
பிறகு சந்தியா, சரவணன் ஒவ்வொருவரையாக அறிமுகப்படுத்தி வைக்கிறார். சல்மா பற்றி சொல்லும் போது தெரியும் நீ என அர்ச்சனா வாய்விட செந்தில் எப்படி தெரியும் என கேட்கிறார். உடனே அர்ச்சனா டங்கு ஸ்லிப் ஆகிடுச்சு என கூறி சமாளித்து விடுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.