தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2.
இன்றைய எபிசோடில் சந்தியா ஊருக்கு கிளம்ப சிவகாமி நீ ஜெயிச்சு கப்போட போலீசாக வரணும் அதுக்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன் என சொல்ல சந்தியா கண்டிப்பாக உங்க கனவை நான் நிறைவேற்றுவேன் என கூறுகிறார்.
அடுத்து சந்தியா ஊருக்கு கிளம்ப சரவணன் வருத்தப்பட பிறகு சந்தியா கண்கலங்கி விடை பெறுகிறார். மறுநாள் காலையில் சிவகாமி வருத்தத்தோடு அமர்ந்து கொண்டிருக்க பிறகு கணவர் வர அவரிடம் இந்தத் தேர்தல் குறித்து பேசி வருத்தப்படுகிறார்.
அதன் பிறகு அர்ச்சனாவின் குடும்பத்தார் வீட்டுக்கு பூசாரி உடன் வந்து செந்திலுக்காக வேண்டுதல் செய்து சிறப்புக்கு பூஜை செய்ததாக கூற பூசாரி மாலை அணிவித்து இந்த தேர்தலில் உங்களை எதிர்த்து நிற்பவர் மண்ணோட மண்ணாகி விடுவார் என சொல்லி போகிறார்.
அர்ச்சனாவின் அம்மா அப்பாவிடம் சிவகாமி யாரிடம் சொல்லி பூஜை பண்ணீங்க? செந்தில எதிர்த்து நிற்கிறது யாரு? ஒருத்தர் ஜெயிக்கணும் ஒருத்தர் அடையாளம் தெரியாமல் போகணும்னு சாபம் விடுகிறார் இதெல்லாம் நல்லாதான் இருக்கு என கேட்க அர்ச்சனாவின் குடும்பத்தார் நீங்க கேட்டத பாசம் இல்ல வேஷம் ஒரு கண்ணுல கண்ணையும் ஒரு கண்ணுல சுண்ணாம்பு வைக்கிறீங்க என திட்டுகிறார்.
அதன் பிறகு செந்தில் நான் முன்னேறதுல உங்களுக்கு சந்தோஷமே இல்லையா என சொல்ல இன்னும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.