Raja Rani 2 Episode Update 05.10.21

அர்ச்சனா போட்ட பிளானால் சந்தியாவை திட்டி தீர்த்துள்ளார் சிவகாமி.

Raja Rani 2 Episode Update 05.10.21 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. தன்னுடைய தங்கச்சி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற செய்தியைக் கேட்ட அர்ச்சனா மருத்துவமனைக்கு ஓடிச்சென்று அவரை திட்டித் தீர்த்தார். அதன் பின்னர் வீட்டுக்கு வந்த அவர் சந்தியா சரவணன் ஒன்றாக நின்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். சரவணன் கடைக்காக சரக்கு எடுத்துச் செல்ல வந்ததாக கூறினார். சந்தியா நானும் உங்களுக்கு உதவி செய்கிறேன் எனக் கூறினார்.

இந்த நேரத்தில் போன் அடிக்க சந்தியா அதனை எடுத்து பேசி விட்டு திரும்பியதும் அர்ச்சனா அங்கு வந்து தலையில் ஏதோ இருப்பதாகவும் அதை எடுப்பது போல தலையை கலைத்து விட்டு நெற்றியில் இருந்த குங்குமத்தை கலைத்துவிட்டார். இந்த நேரத்தில் சிவகாமி வர அர்ச்சனா உடனே தன்னுடைய அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என அழுது ஆர்ப்பாட்டம் செய்தார். அதன் பின்னர் சந்தியாவும் சரவணனும் குடோனில் இருந்து வருவதைப் பார்த்தார். சந்தியா தலை கலைந்து நெற்றியில் குங்குமம் கலைந்து இருப்பதைப் பார்த்து சிவகாமி அவரை அழைத்து ஆடிமாசம் தொடங்கிடுச்சி கட்டுப்பாட்டோடு இருக்கணும்னு சொன்னேன். ஆனால் உன்னால ஒரு மாசம் பொறுத்திருக்க முடியாதா என சந்தியாவை திட்டி தீர்த்தார். நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் நடக்கல எனக் கூறியும் நான் நினைக்கிற மாதிரி தான் நீ நடப்பது இல்லையே என சந்தியாவை திட்டினார்.

16-ந்தேதி சபரிமலை நடை திறப்பு : தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

பின்னர் அர்ச்சனா பார்வதியின் முன்னாள் காதலன் விக்கிக்கு போன் செய்து பார்வதியோடு கல்யாணத்தை நடத்த திட்டமிட்டு இருக்க எனக் கேட்க கல்யாணத்தை நிறுத்துவதற்கான ஏற்பாடு நடந்துகிட்டு இருக்கு என கூறினார். இந்தப்பக்கம் சந்தியா சிவகாமி தன்னைப் புரிந்து கொள்ளாமல் திட்டியது எண்ணி வருத்தப் படுகிறார். ‌‌ அந்த நேரத்தில் பார்வதி விக்கி பாஸ்கர் உடன் பிரண்டாகி இருப்பதைப் பற்றிக் கூற சென்று பின்னர் சந்தியா ஏதோ சிந்தனையில் இருந்ததால் சொல்லாமல் வந்து விடுகிறார். அதன் பின்னர் சரவணன் சென்று என்ன ஏது என விசாரிக்க தலைவலி என கூறுகிறார் சந்தியா.

விஜய்சேதிபதியை புகழ்ந்து தள்ளிய Bhagyaraj – வைரலாகும் வீடியோ | Sethupathi 1 crore Donation To FEFSI

மறுநாள் காலையில் அனைவரும் குடும்பத்தோடு சினிமாவுக்கு செல்கின்றனர். மகிழ்ச்சியோடு அனைவரும் சினிமாவுக்கு கிளம்பியதோடு இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் நிறைவடைந்தது.