Raja Rani 2 Episode Update 04.10.21

முதலிரவுக்கு சந்தியாவின் சரவணன் தயாராக இறுதியில் எதிர்பாராத ஷாக் கொடுத்துள்ளார் சிவகாமி.

Raja Rani 2 Episode Update 04.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. கடையில் சரவணன் வேலை பார்த்துக்கொண்டிருக்க வழக்கம்போல் கையில் சூடு வைத்து கொள்கிறார். அதன் பின்னர் தன் சந்தியா வாங்கி கொடுத்த கிளவுஸ் அவருக்கு ஞாபகம் வருகிறது.

பண்டிகை விடுமுறை : பயணிகள் கவனிக்கவும்

சிலர் அல்வாவையும் மல்லிகை பூவையும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு செல்கிறார். அதேபோல் சந்தியா வீட்டில் பூக்கள் எல்லாம் வாங்கி வந்து தன்னுடைய படுக்கையறையில் முதலிரவுக்காக தயார் செய்கிறார். அனைத்தையும் மாற்றி நம்மை அழகாக அட்டகாசமாக மாற்றிவிட்டார்.

தளபதியின் Beast Update-டை உளறிய Actor Tony – கலாய்த்த சிவகார்த்திகேயன்! | Doctor Press Meet

இந்த நேரத்தில் சிவகாமி சந்தியா சந்தியா என குரல் கொடுக்க வெளியே செல்கிறார் சந்தியா. சந்தியாவையும் அர்ச்சனா அறையில் அடைத்து வைத்து ஆடி மாதம் தொடங்கி விட்டது. உங்கள உங்க அப்பா அம்மா வீட்டுக்கு அனுப்புற சூழ்நிலை இங்கே இல்லை. அதனால் நீங்கதான் எப்படி நடந்துக்கணும் என்பதும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். நான் என்ன சொல்றேன் நீ தெரியுதா என்று கேட்கிறார்.

இதனை வெளியில் இருந்து கேட்ட சரவணன் வாங்கி வந்த அல்வாவை தன்னுடைய தங்கச்சி பார்வதியைப் பார்த்து பேசுவது போல பேசி விட்டு அவர் பக்கத்தில் இந்த ஸ்வீட்டை வைத்து விட்டு வந்து விடுகிறார். சந்தியா நேராக ரூமிற்கு சென்று செய்த அலங்காரம் எல்லாத்தையும் அடையாளம் தெரியாமல் எடுத்து விடுகிறார்.

அதன் பின்னர் மறுநாள் காலையில் அர்ச்சனா மாமியார் சிவகாமியிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவருக்கு போன் கால் வருகிறது. அர்ச்சனாவின் தங்கச்சி தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டதாக அவருடைய அம்மா கூறுகிறார். இதனால் பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறார்.

இந்த பக்கம் சரவணன் காலண்டரை வைத்து ஆடி மாசம் எப்போது முடியும் என பார்த்துக் கொண்டிருக்கிறார். இல்லை முப்பது நாட்கள் இருப்பதை எண்ணி அதிர்ச்சி அடைகிறார். இந்த நேரத்தில் சந்தியாவிற்கு தங்களுடைய வீட்டிற்கு பக்கத்தில் சென்னையில் இருந்து புதிதாக ஒருவர் வாடகைக்கு வந்திருப்பதாக கூறுகிறார். அந்தப் பொண்ணு மொட்ட மாடியில டான்ஸ் ஆடிக்கிட்டு இருந்துச்சு. இந்த பொண்ணுக்கு ஆடவே தெரியல நல்லாவே ஆடல என கூறுகிறார்.

சந்தியா ஆடி ஆடி என ஆடி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதை கேட்டு சரவணன் கடுப்பாகிறார். அதன் பின்னர் சந்தியாவுக்கு தெரியாமல் தன் பக்கத்தில் வைத்திருந்த காலண்டரை மறைக்க அது என்ன என எடுத்து பார்த்து சந்தியா ஆடி மாதம் எப்போது முடியுது என பார்த்துட்டு இருக்கிங்களா எனக் கேட்கிறார். அதெல்லாம் ஒன்னும் இலலைங்க என எஸ் ஆகி விடுகிறார் சரவணன்‌. அதன்பிறகு சந்தியாவும் ஆடி மாசம் எப்போ முடியுது என பார்க்கிறார். அவரும் 30 நாள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்.