சந்தியாவுக்கு எதிரியாக மாறி சிவகாமி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரை விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சிவகாமி போலி சாமியாரின் போட்டோவை வாங்கி வந்து வீட்டில் மாட்ட சந்தியா மனதுக்குள் இவர் ஒரு போலி சாமியார் என சொல்லிக் கொள்கிறார்.

அதன் பிறகு சிவகாமி கிச்சனில் இருக்க அவரிடம் சென்று சந்தியா பேச முயற்சி செய்ய அவர் வெளியே வந்து விட இதை பார்த்த அர்ச்சனா சந்தியாவை நக்கல் அடிக்கிறார். உடனே நீங்க ரெண்டு பேருக்குள்ள இருக்கறது சாதாரண கருத்து வேறுபாடு இது சரியாகிவிடும். ஆனா இத வச்சு குளிர்காய நினைச்ச நீ இதுவரைக்கும் செஞ்ச எல்லாத்தையும் நான் போட்டு உடைத்து விடுவேன் என சொல்லி அர்ச்சனாவுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார் சந்தியா.

அதன் பிறகு சந்தியா மயிலிடம் வந்து தன்னுடைய துணிகளை கேட்க அப்போது சிவகாமி இதையெல்லாம் கஞ்சி போட்டு அயர்ன் பண்ணு என கூறுகிறார். சந்தியா நானே பண்ணிக்கிறேன் என சொல்ல சிவகாமி மயிலிடம் சொன்னதை செய் என கூறுகிறார். பிறகு சாப்பிடும்போது சந்தியாவை உட்கார வைத்து நீ முதல்ல சாப்பிடு என பரிமாறுகிறார் சிவகாமி.

சரவணன் அப்பா கடைக்கு வந்து சரவணன் இடம் இனிமே பார்த்து நடந்துக்க வேண்டும் என சில அறிவுரைகளை வழங்குகிறார். பிறகு சந்தியா சிவகாமியிடம் சென்று நீங்கள் இப்படி பேசாமல் இருக்கிறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என அழுது கெஞ்சுகிறார். உங்களுக்கு பிடிக்கலன்னா நான் படிக்கல என சந்தியா சொல்ல இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் இது வீடு இல்ல போர்க்களம். இந்த போட்டியில் நீ ஜெயிக்கிறியா இல்ல நான் ஜெயிக்கிறியானு பார்த்திடலாம் என சவால் விடுகிறார். இதனால் சரவணன் சந்தியா என இருவரும் அதிர்ச்சடைகின்றனர். ‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.