தாலி கட்டும் நேரத்தில் பார்வதி, பாஸ்கர் திருமணத்தை நிறுத்தியுள்ளார் விக்கி.
Raja Rani 2 Episode Update 04.05.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் பார்வதி தற்கொலைக்கு முயல ஆனால் பேனில் வேட்டியை சரியாக கட்டாததால் அவர் கீழே விழுந்து விடுகிறார். அதன் பிறகு மீண்டும் தற்கொலைக்கு முயற்சி செய்யலாம் என முடிவு செய்ய பிறகு நான் ஏன் சாகணும் என நினைத்து பார்க்கிறார். தப்பு செய்தால் தான் சாகவேண்டும் தப்பு செய்தது விட்டு தான் அவன் தான் தண்டனை அனுபவிக்கணும் சாகவேண்டும் நான் இதற்கு சாகவேண்டும் எதையும் துணிச்சலுடன் எதிர்த்துப் போராட வேண்டும் என முடிவு செய்கிறார். சந்தியா பண்ணு வார்த்தைகளை மனதிற்குள் கொண்டு வருகிறார்.
அதன்பிறகு விக்கிக்கு போன் செய்து உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் இனிமே என்னால எதுவும் பண்ண முடியாது நான் எதுக்கும் பயப்பட போவதில்லை என கூறுகிறார். இதையெல்லாம் கேட்ட விக்கி உனக்கு செக் வைக்க வேண்டிய இடத்தில் வைத்துக் கொள்கிறேன் என போனை வைக்கிறார். மறுநாள் காலையில் அர்ச்சனா தன்னுடைய தங்கச்சிக்கு போன் போட்டு சீக்கிரம் வாங்க கல்யாணம் கண்டிப்பாக நிற்கும் பாஸ்கர் உன் கழுத்தில் தாலியைக் கட்டுவார். மேல 4-ம் நம்பர் ரூம்ல உனக்கு மேக்கப் போட ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட் ரெடி பண்ணி இருக்கேன் என சொல்கிறார்.
அதன் பிறகு சந்தியா பார்வதி பார்க்கப் போக பார்வதி எங்க போயிட்டீங்க நான் உங்கள தேடிக்கிட்டே இருந்தேன் என் கூடவே இருங்க என கூறுகிறார். பின்னர் மாப்பிள்ளையும் பொண்ணும் மண மேடையில் உட்கார வைத்து எல்லா ஏற்பாடுகளும் நடந்து தாலி கட்டும் நேரத்தில் விக்கி கல்யாணத்தை நிறுத்துகிறார். உன் குரலைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்து அப்படியே நிற்கின்றனர். பிறகு விக்கி பாக்கெட்டிலிருந்து போட்டோக்களை எடுத்து பறக்க விடுகிறார். இதனால் பார்வதி மற்றும் பாஸ்கர் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.