செல்வம் பற்றிய மற்ற உண்மைகள் போலீசுக்குத் தெரிய வர கடைசியில் துப்பாக்கி முனையில் சிக்கியுள்ளார் சரவணன்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் கண்விழித்த பார்வதி சந்தியாவிடம் செல்வம் நல்லவன் இல்ல அவன் தீவிரவாதி. அவன் தன் என்னை கடத்தியது. அவனைச் சுற்றி ஒரு பெரிய இயக்கமாக இருக்கிறது என கூற உடனே சந்தியா செல்வத்தை பிடிக்க போலீசுடன் உள்ளே செல்ல அப்போது சரவணனுக்கு ஃபோன் போடுகிறார்.

செல்வத்துக்கு கட்டுப் போட்டுக் கொண்டிருந்த சரவணன் போன் அடிக்க சந்தியா தான் எடுத்துப் பேசினேன் போனை கொடுக்க செல்வம் போன் அட்டென்ட் செய்ய சந்தியா பேசுவது யார் என்று தெரியாமல் மொத்த உண்மையையும் சொல்லிவிடுகிறார்.

தன்னைப் பற்றிய உண்மை எல்லோருக்கும் தெரிய வந்து விட்டதால் அங்கிருந்து எஸ்கேப் ஆகிறார் செல்வம். உள்ளே வந்த சந்தியா செல்வம் பற்றி விசாரிக்க அங்கே தான் இருந்தான் நான் போனில் பேசுவதை நீங்க கேட்டீங்களா இல்லையா எனக் கேட்க செல்வந்தன் போன் அட்டென்ட் செய்தான் என சொல்ல, அவன் தான் தீவிரவாதி இது எல்லாத்துக்கும் நான்தான் காரணம் என சொல்ல உடனே சரவணன் செல்வம் இருந்த இடத்தை தேடி ஓடுகிறார் சரவணன்.

அதன்பிறகு சந்தியா ஒரு பக்கம் செல்வத்தை தேட செல்வம் கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்ய அதை பார்த்த சரவணன் அவரை துரத்திக் கொண்டு ஓடுகிறார். கடைசியில் செல்வம் தன்னுடைய இயக்கத்தை கொண்டு சரவணனை ரவுண்டு கட்ட அவர்கள் அனைவரையும் துவம்சம் செய்கிறார்.

இந்த பக்கம் கோவிலுக்குள் ஓடி வந்த ஆதி பார்வதி கிடைத்து விட்டதாகவும் இது எல்லாத்துக்கும் செல்வம் தான் காரணம் எனவும் கூறுகிறார். இதைக் கேட்ட அதிர்ச்சியான குடும்பத்தார் உடனடியாக பார்வதியை பார்க்க வெளியே கிளம்பி சென்றனர்.

இந்த பக்கம் சரவணன் செல்வத்தை பிடிக்க கடைசியில் செல்வன் துப்பாக்கியை வைத்து சரவணனை மிரட்டுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.