போலீஸில் செல்வம் சிக்கி தப்பித்துள்ளார். பார்வதி செல்வம் பற்றிய உண்மைகளை கூறியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் பார்வதி குடும்பத்தினர் மனித வெடிகுண்டை வெற்றிகரமாக அகற்றுகின்றனர். அதன் பின்னர் சந்தியா பார்வதியிடம் கடத்தியது யார் ஏதாவது விஷயம் தெரியுமா? தீவிரவாத கும்பல் வேறு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறார்களா அது பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்க அந்த நேரத்தில் செல்வத்தின் பெயரை மட்டும் சொல்லிவிட்டு பார்வதி மயங்கி விழுந்து விடுகிறார்.

பிறகு மருத்துவ குழு அவரை ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கிறது. செல்வத்தின் பெயரை எழுதிப் பார்ப்பது சொல்ல வேண்டும் என யோசித்த சந்தியா உடனடியாக சரவணனுக்கு ஃபோன் செய்து செல்வம் எங்கே இருக்கிறான், உடனே அவனை போன் செய்து வரச் சொல்லுங்கள் என கூறுகிறார்.

ஒருவேளை செல்வம் அப்பா அம்மா கூட இருக்கலாம் என நினைத்து சரவணன் அவர்களைத் தேடி தேடிச் செல்ல செல்வம் இல்லை. எனக்கு சிவகாமி எங்கதான் போனிங்க சந்தியா எங்கே? எதற்கு பதற்றமாக இருக்கிற என கேட்க அதெல்லாம் ஒன்றுமில்லை இதோ வந்து விடுகிறேன் என்று சொல்லி சரவணன் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

இந்தப் பக்கம் செல்வம் தன் அமைப்பை சேர்ந்த ஒருவரிடம் கண்டிப்பாக கோவில் திருவிழாவில் ஒரு பாம் பிளாஸ்ட் நடக்கும். பார்வதி என் பெயரைச் சொல்லாமல் இருக்க வேண்டும் என கூறுகிறார். இந்த நேரத்தில் கரெக்டாக சரவணன் போனை எடுத்தேன் செல்வம் போனை அட்டென்ட் செய்யாமல் இருந்து வருகிறார். திரும்பத் திரும்ப போன் செய்து கொண்டே இருக்க என்ன தான் நிலவரம் என அறிந்து கொள்வதற்காக செல்வம் போனை அட்டென்ட் செய்து பேசுகிறார்.

சரவணன் எங்கே இருக்கிறாய் என்ன ஏது என கேட்டு கோவிலில் கொடிமரம் அருகே இருக்கிறேன் வா என கூறுகிறார். பிறகு செல்வன் உள்ளே சென்று சர்க்கரை எப்படி இருக்கிறாய் திட்டம் நடக்குமா நடக்காதா என தெரிந்து கொண்டு வருகிறேன் எனச் சொல்கிறார். பிறகு உள்ளே செல்லும்போது பேரிகார்டு இடித்துக்கொண்டு கீழே விழுந்துவிட போலிஸ் செல்வத்தை கூட்டிச் சென்று முதலுதவி அளிக்கின்றனர்.

இந்த நேரத்தில் சரவணன் இங்கு வந்து விட அப்போது அவர் வந்து செல்வத்திற்கு முதல் உதவி செய்கிறார். எதுக்கு என்ன வர சொன்னிங்க என கேட்டேன் சந்தியா தான் உனக்கு போன் பண்ணி வர சொன்னாங்க என கூறுகிறார். உடனே என்ன விஷயம் அண்ணி ஏதாவது சொன்னாங்களா எனக்கேட்க தெரியல என கூறுகிறார்.

இந்த பக்கம் பார்வதி கண் விழித்துக் கொள்ள அவரிடம் சந்தியா உன்னை கடத்தியது யார் உனக்கு என்ன விஷயம் தெரியும் என்னன்னு தெரியுமா அதையெல்லாம் சொல்லு, நீ சொல்லும் விஷயங்களை வைத்துத்தான் தீவிரவாதிகளை பிடிக்க வேண்டும் என கூற செல்வம் நல்லவன் கிடையாது அவன் ஒரு தீவிரவாதி எனக் கூற சந்தியா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.