சந்தியா சோகத்தில் இருக்க சரவணனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது.

Raja Rani 2 Episode Update 01.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் சல்மா மீது தெரியாமல் உணவுப் பொருளைக் கொட்டியதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார் சந்தியா. அதற்காக அவரிடம் நான் இன்னொரு முறை மன்னிப்புக் கேட்டு வருகிறேன் எனக் கூற அவரை சுற்றியிருந்தவர்கள் அவரைப் பார்க்கப் போனால் தற்போது சண்டைதான் வரும் நான் பேசிக் கொள்கிறேன் என கூறுகின்றனர். பிறகு சரவணனும் நீங்க அமைதியா விடுங்க உங்க மேல தப்பு இல்ல. இல்லனா நான் பேய் பேசுகிறேன் என கூறுகிறார். பிறகு அனைவரும் ரூமுக்கு கிளம்புகின்றனர்.

சஸ்பெண்ட் விவகாரம் : நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்..

சரவணன் வீட்டில் இருந்தவர்கள் தான் இங்கு வரமுடியவில்லை போட்டோ எடுத்து அனுப்பினால் அதை பார்த்து சந்தோஷப்படுவார்கள் ஹோட்டலை போட்டோ எடுக்கிறார். இந்த நேரத்தில் போட்டி நடத்தும் அதிகாரிகள் அந்த வழியாக வர அவர்களிடம் சந்தியா எங்களுடன் கெஸ்ட் யாரும் வரவில்லை. அதனால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட ப்ரியாகத்தானே இருக்கிறது என கேட்கிறார். நீங்க அனுமதி கொடுத்தால் எங்களுடைய குடும்பத்தாரை அந்த ரூமில் தங்க வைத்துக் கொள்ளவா என கேட்கிறார். குடும்பத்தார் என்றால் நிறைய பேரா என கேட்கின்றனர். ஆமாம் என சந்தியா சொல்ல அவர்களுக்கு எல்லாம் செலவு செய்ய முடியாது என கூறி விடுகின்றனர். அவர்கள் வரும் செலவை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் தங்குவதற்கு இடம் கொடுத்தால் மட்டும் போதும் என கூறுகிறார்.

இதில் நாங்கள் முடிவு சொல்ல முடியாது. போட்டி நடத்தும் உயர் அதிகாரிகளிடம் கேட்டு செல்வதாக கூறுகின்றனர். இந்தப் பக்கம் செந்தில் பாங்கிற்கு கிளம்ப அப்போது அவரிடம் நான் சரவணன் மாமா ஸ்வீட் கடையை பார்த்துக்கிறேன். நீங்க இந்த கடையை பார்த்துக் கொண்டே என அர்த்தமா சொல்ல நீ இவ்வளவு அக்கறையா செய்ய மாட்டியே என்ன திட்டம் வைத்திருக்க என கேட்கிறார். உடனே அர்ச்சனா என்ன நீங்களே நம்பள நான் யார் நம்புவாங்க என அழுது ஆர்ப்பாட்டம் செய்து செந்திலை நம்ப வைக்கிறார். கடைக்கு வர கூட்டத்தை எப்படி நம்ப ஜவுளி கடை பக்கம் திருப்புரேனு பாருங்க என மனதுக்குள் கணக்குப் போடுகிறார்.

Ajith ரசிகர்களுக்கு காத்திருக்கும் Surprise – Dhruv Vikram அடுத்த படம் இவருடனா?

இந்த பக்கம் பைனல் நிகழ்ச்சி நாளை நடைபெற இருப்பதால் போட்டியாளர்களின் டென்ஷனை குறைக்க கலகலப்பான போட்டி இன்று நடைபெறுகிறது. அதாவது போட்டியாளர்கள் அவர்களைப் பற்றியும் அவர்கள் கடந்து வந்த பாதையைப் பற்றி பேச வேண்டும் என கூறுகின்றனர். போட்டியாளர்கள் ஒவ்வொருவராக சென்று பேச இறுதியாக சரவணனுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் சரவணன் மேடைப்பேச்சு பழக்கம் இல்லாததால் பேச தயங்குகிறார். சந்தியா கீழே இருந்து பேசுங்க பேசுங்க என எவ்வளவு சொல்லியும் அவரால் பேச முடியவில்லை. இதனால் தொகுப்பாளர் உங்களுக்கு மேடையில் பேசவே பயமாக இருக்கிறது. நீங்க ஃபைனல் வரைக்கும் சென்று வெற்றி பெறுவது சந்தேகம் என நாங்கள் நினைக்கிறோம். ஆகையால் உங்களுக்கு ஒரு சமையல் போட்டி வைக்கிறார். என்ன செய்யப் போகிறீர்கள் எனக் கேட்க சரவணன் பிரட் அல்வா என கூறுகிறார்.

பிறகு சரவணன் பிரட் அல்வா செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார். அனைவரும் வேற லெவல் டேஸ்ட் என கூறுகின்றனர். சந்தியா சரவணனை கட்டியணைத்து வாழ்த்து கூறுகிறார். இதனையடுத்து சந்தியா உயர் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கிறார். அதில் ஒருவர் நானும் கிராமத்திலிருந்து வந்தவன் தான். எனக்கு முதலில் இந்த தயக்கம் எல்லாம் இருந்தது. அதனால்தான் சரவணனுக்கு அப்படி ஒரு வாய்ப்பு கொடுத்தேன் என கூறுகிறார்.

அதன் பிறகு தன்னுடைய குடும்பத்தாரை தங்க வைக்க ரூம் கேட்டது குறித்து கேட்கிறார். அதிகாரிகள் ஓகே சொல்லிவிட்டதாக கூற சந்தியா உச்சகட்ட மகிழ்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.