Rain Update
Rain Update

Rain Update : நவம்பர் 1 முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தனியார் வானிலை ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளன.

இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவ காற்று துவங்கியுள்ளது.

இன்னும் 4 நாட்களில், பருவக்காற்று வலுப்பெற்று, மழையாக மாறும். வரும் 29 – ஆம் தேதி முதல் , வாங்க கடலின் மத்திய மேற்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வு உருவாகும்.

இது வடமேற்கில் நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் 30 ஆம் தேதி முதல் கனமழை பெய்யும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை சார்ந்த மாவட்டங்களில் தொடர்மழை பெய்யும்.

ஆனால் 31- ஆம் தேதி வரை தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை இல்லை” என தெரிவிததுள்ளனர்.

அதேநேரம் நவம்பர் மாதம் தொடக்கத்தில் மிதமான மழையும் அதன்பின் அதை தொடர்ந்து தொடர்மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தனியார் வானிலை ஆய்வு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ள தகவலில், ” வரும் நவம்பர் 1 முதல் 3 ஆம் தேதி வரை சென்னை, நாகை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், இராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் தொடர்மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.