பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இருந்து வைரமுத்து நீக்கப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு நைசா நழுவி கொள்ளும் வகையில் பதில் கூறியுள்ளார் ரஹ்மான்.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர் கவிஞர் வைரமுத்து. இதுவரை பல ஆயிரம் படங்களுக்கு பாடல்களுக்கு எழுதி உள்ளார்.
இந்நிலையில் மணிரத்தினம் இயக்கி வரும் பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் படத்திற்கும் பாடல் எழுத கமிட்டாகி இருந்த நிலையில் அவர் நீக்கப்பட்டு விட்டதாக தகவல் ஒன்று பரவியது.
இதனை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் டீம் லிஸ்டில் வைரமுத்து பெயர் இடம் பெறவில்லை.
இது குறித்து நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து ஏ.ஆர் ரஹ்மானிடம் கேட்ட போது இதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது. மணிரத்தினம் சார் கூறுவார் என பதிலளித்துள்ளார்.