ரகுவரன் கொடுத்த அட்வைஸ் சூர்யாவின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது.
Raghuvaran Advice to Suriya : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. வாரிசு நடிகராக இருந்தாலும் தமிழ் சினிமாவில் இன்று ஜொலித்து வருகிறார்.
இதற்கு ஒரு வகையில் காரணம் ரகுவரனும் தான். அதாவது சூர்யாவும் ரகுவரன் இணைந்து உயிரிலே கலந்தது என்ற படத்தில் நடித்து இருந்தது நாம் அனைவரும் அறிந்ததே.
இந்த படத்தின் படப்பிடிப்பு சூர்யா ஒரு நாள் தூங்கிக் கொண்டிருந்தாராம். இதனைப் பார்த்த ரகுவரன் அவரை அழைத்து நீ இப்போது தான் சினிமாவில் வளர்ந்து வருகின்றாய். நீ சாதிக்கும் வரை உனக்கு தூக்கம் வரக்கூடாது என கூறியுள்ளார்.
ரகுவரனின் இந்த வார்த்தைக்கு பிறகு சூர்யா படப்பிடிப்பில் தூங்குவதே இல்லையாம். சூர்யாவின் இந்த அயராத உழைப்பிற்கும் வெற்றிக்கும் ஒரு வகையில் ரகுவரனும் காரணம் என கூறுகின்றனர்.