Raghava Lawrence : நடிகர் ராகவா லாரன்ஸ் தான் சொன்னது போலவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி தரும் வேலையில் இறங்கியுள்ளார்.
தமிழகத்தை தாக்கிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடும் பாதிப்புள்ளாகியுள்ளன. இதனால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகள் கடுமையான இழப்பை சந்தித்துள்ளன.
இப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திரையுலக பிரபலங்கள் பலரும் உதவி செய்து வருகின்றனர். நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் 50 பேருக்கு வீடு கட்டி கொடுக்க உள்ளதாக கூறியிருந்தார்.
அதன்படியே தற்போது வீட்டை இழந்து தவிக்கும் தாயார் ஒருவருக்கு வீடு கட்டி கொடுக்க பூமி பூஜை போட்டுள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாக ரசிகர்கள், பொது மக்கள் என பலரும் பாராட்டுகளை பெற்று வருகின்றன.