கொரானாவில் பாதிக்கப்பட்டிருந்த ராகவா லாரன்ஸின் ட்ரஸ்ட்டை சேர்ந்த குழந்தைகள் அதிலிருந்து மீண்டு உள்ளனர்.
Raghava Lawrence Trust Members Recovered From Corona : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் இந்தியாவிலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது.
இடை விடாது தொடரும் ராகவா லாரன்ஸின் நிதியுதவி.. இப்போ ரூபாய் 50 இலட்சம், இது எதற்காக தெரியுமா?
தமிழகத்தின் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் சென்னையில் கொரானா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
இந்த கொரானா வைரஸின் தாக்குதலுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் அவரது டிரஸ்டில் இருந்த குழந்தைகள் சமையல் காரர், பாதுகாவலர் என கிட்டத்தட்ட 20 பேர் பாதிப்புக்குள்ளாகி இருந்தனர்.
வேறொரு விஜயை பார்க்க போறீங்க.. சரித்திரக் கதையில் தளபதி – படத்தை இயக்கப்போவது இவர் தான்!
இவர்களுக்கு சென்னை லயோலா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த குழந்தைகள் அனைவரும் கொரானாவின் பிடியிலிருந்து தப்பி குணமடைந்துள்ளனர்.
இதனை நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்தியுள்ளார்.
My kids are safely recovered from Coronavirus@SPVelumanicbe pic.twitter.com/nXC07q46RI
— Raghava Lawrence (@offl_Lawrence) June 4, 2020