ரஜினிக்கு நன்றி கூறி அஜித் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
Raghava Lawrence request Ajith Vijay : கரோனா வைரஸ் தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸிற்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதனால் பொருளாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் உதவி வருகின்றனர். அதிலும் குறிப்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் பல்வேறு தரப்பினருக்கும் தொடர்ந்து உதவி வருகிறார்.
இன்னும் உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் தற்போது அந்த அளவிற்கு பணம் இல்லாததால் பலரிடம் உதவி கேட்டுள்ளார். ராகவா லாரன்ஸின் கோரிக்கையை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் 100 மூட்டை அரிசி அனுப்பியுள்ளார்.
இதனை அடுத்து லாரன்ஸ் ரஜினிக்கு நன்றி கூறியுள்ளார். மேலும் அது விஜய், விஜய் ஆகியோருக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.
அஜித்-விஜய் ஆகிய ராகவா லாரன்சின் கோரிக்கையை ஏற்று உதவுவர்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
— Raghava Lawrence (@offl_Lawrence) April 30, 2020