Raghava Lawrence New Statement
Raghava Lawrence New Statement

ராகவா லாரன்ஸ் தன்னிடம் உதவி கேட்டவர்களுக்கு பதில் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Raghava Lawrence New Statement : இந்தியாவில் பரவிவரும் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பல வேலைகளை இழந்து அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் திரையுலக பிரபலங்கள் பலரும் மத்திய மாநில அரசுகளுக்கு உதவி வருகின்றனர். நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வந்தார்.

இதனால் மேலும் பல சங்கங்கள் அவரிடம் உதவி கேட்டு தொடர்ந்து கடிதங்களை அனுப்பி வருகின்றன. இதுகுறித்து தற்போது அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மூன்று கோடியை தொடர்ந்து மீண்டும் நிதியளித்த ராகவா லாரன்ஸ் – இந்த முறை எவ்வளவு? யாருக்கு கொடுத்துள்ளார் தெரியுமா?

அந்த அறிக்கையில் பாண்டிச்சேரி மற்றும் பல இடங்களில் இருந்து தனக்கு உதவுமாறு கோரிக்கை கள் வந்து கொண்டே இருக்கின்றன.

எல்லாருடைய கஷ்டமும் எனக்குப் பிடிக்கிறது ஆனால் என்னிடம் இருந்த பணம் தீர்ந்து விட்டது. சந்திரமுகி2, லட்சுமி பாம் படக்குழுவினரிடம் இருந்து வர வேண்டிய பணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

தற்போதைய சூழ்நிலையில் அவர்களும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கின்றனர். லக்ஷ்மி பாம் படக்குழுவினரை எனக்கு தரவேண்டிய இரண்டு இலட்சத்தை நேரடியாக பிரதிநிதிக்கு அனுப்புமாறு கூறி விட்டேன் அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

எனக்கு வந்து சேரவேண்டிய இடங்களிலிருந்து பணம் வந்தபிறகு நிச்சயம் இவர்களுக்கு அனைவருக்கும் உதவுவேன் எனக் கூறியுள்ளார்.