நடிகர் ராகவா லாரன்சின் நிதியுதவி இடைவிடாமல் தொடர்ந்து வருகிறது.
Raghava Lawrence Contribution Details : இந்தியாவில் கொரானா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
உங்களை எதிர்த்த சீமானையே மாத்திடீங்க தலைவா.. ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிக்கை.!
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வறுமையில் வாடிய குடும்பங்கள் தற்போது ஒரு வேளை உணவிற்கே அல்லாடி வருகின்றன.
நடிகர் ராகவா லாரன்ஸ் மத்திய அரசு, மாநில அரசு, பெப்சி அமைப்பு, நடன கலைஞர்கள் சங்கம், மாற்றுத் திறனாளிகளின நலனுக்காக, ராயபுரம் ஏழை மக்களுக்காக என ரூபாய் மூன்று கோடி நிதி வழங்கியிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் விநியோகிஸ்தர் சங்கத்துக்கும் ரூபாய் 25 லட்சம் வழங்கினார். இப்படி பல்வேறு தரப்பினருக்கு நிதி வழங்கி வந்த ராகவா லாரன்ஸ் தற்போது அம்மா உணவகங்களில் ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்குவதற்காக ரூபாய் 5 லட்சம் வழங்கியுள்ளார்.