ஜெய்பீம் படத்தின் எதிரொலியாக ரியல் ராசா கண்ணு மனைவிக்கு வீடு கட்டித் தருவதாக பிரபல நடிகர் அறிவித்துள்ளார்.
Raghava Lawrence Announcement After JaiBhim : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் ஜெய்பீம். ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் இந்தப் படத்தை பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஜெய்பீம் படத்தையும் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோரையும் பாராட்டி பதிவு செய்துள்ளார். கடந்த 1993ஆம் ஆண்டு போலீசாரின் கொடுமையால் உயிரிழந்த ராசா கண்ணுவின் மனைவி பார்வதிக்கு தன்னுடைய சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.
ரெண்டு பேரோட Combo செம – Enemy Day 4 Common Audience Review | Vishal, Arya, Mirnalini Ravi | HD
இதுகுறித்து ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவருடைய இந்த முயற்சியை பாராட்டி பதிவு செய்து வருகின்றனர்.