Raghava Lawrence About Drink Addict
Raghava Lawrence About Drink Addict

இவர்களுக்கு உதவுவதே மகா குற்றம் என்பது போல நடிகர் ராகவா லாரன்ஸ் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Raghava Lawrence About Drink Addict : கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

பிரதமரின் பேச்சை விளாசிய குஷ்பு.. ஜோக்கர் என பதிலடி கொடுத்த பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க!

தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக ஊரடங்கு தளர்வு ஏற்பட்டு வருகின்றன. பழையபடி பலர் வேலைகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.

அதேசமயம் டாஸ்மாக் கடைகளை திறந்து அமோக விற்பனை செய்து வருகிறது தமிழக அரசு. குடிமகன்களின் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மணிக்கணக்காக கியூவில் நின்று கொண்டிருக்கின்றனர்.

பல இடங்களில் சமூக இடைவெளி என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு குடிமகன்களின் நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.

Lockdown4.0: இப்போ இதுக்கு அவசரம் இல்லையே…, அரசுக்கு நடிகர் விவேக் வேண்டுகோள்.!

இதுபோன்றவர்களுக்கு மக்கள் ஏன் உதவ வேண்டும் என்ற கேள்வி பலர் மத்தியில் எழுந்து வருகிறது. ராகவா லாரன்ஸ் தாயாரும் இதையே தான் கேட்டுள்ளார்.

அதேபோல் பல மக்களின் எண்ணமும் அதுவாகத்தான் இருக்கும். தயவுசெய்து குடிப்பதற்கு முன்னர் பசியால் வாடும் உங்களது குழந்தையின் கண்ணீரை நினைத்துப் பாருங்கள் குடிமகன்களே என கோரிக்கை வைத்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

மற்ற நடிகர்களை காட்டிலும் நடிகர் ராகவா லாரன்ஸ் கொரானா வைரஸ் தாக்கத்திற்கு அதிக அளவில் நிதி உதவி அளித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.