சின்னத்திரையை விட்டு விலகுவதாக நடிகை ராதிகா சரத்குமார் அறிவித்துள்ளார்.
Radhika Sarathkumar Political Entry : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராதிகா சரத்குமார். 1980-களில் நாயகியாக அறிமுகமான இவர் பல படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக இணைந்து நடித்தார்.
தற்போது சின்னத்திரை சீரியல்களிலும் திரைப்படங்களில் கதாநாயகன், கதாநாயகிக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.
தற்போது இவரது நடிப்பில் சன் டிவியில் சித்தி 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் இனி சீரியல்களில் நடிக்க போவதில்லை என அறிவித்துள்ளார்.
மேலும் முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ராதிகாவின் கணவரும் நடிகருமான சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி இந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளலும் தனித்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே ராதிகா இப்படியான ஒரு முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.