புஷ்பவனம் குப்புசாமியின் மகள் காணாமல் போனதாக தகவல் பரவி வந்த நிலையில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பல்லவி அகர்வால்.
நாட்டுப்புற பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா தம்பதியினரின் மூத்த மகள் பல்லவி அகர்வால் காணாமல் போனதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வந்து கொண்டிருந்தது.
இதனையடுத்து நேற்று நான் காணாமல் போகவில்லை, வதந்திகளை நம்பாதீர்கள் என முகநூலில் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த வீடியோவில் நான் காணாமல் போகவில்லை. வீட்டிலேயே தான் இருக்கிறேன்.
என்னுடைய அப்பா அம்மா ஊருக்கு சென்றிருந்த போது எப்படி புகார் அளித்திருக்க முடியும்? எல்லாம் பொய் என அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram