புஷ்பவனம், குப்பு சாமியின் மகள் பல்லவியை காணவில்லை என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் நாட்டுப்புற பாடகர், பாடகியான குப்பு சாமி, புஷ்பவனம் ஆகியோரின் மூத்த மகள் பல்லவி. இவர் காணவில்லை என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பல்லவி நேற்றிரவு காரில் வெளியில் சென்றதாகவும் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனவும் போலீசில் புகார் அளித்துள்ளனர். காரணம் என்ன என்பதும் தெரியவில்லை.
போலீசார் வழக்கு பதிவு செய்து பல்லவியை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.