PT Selvakumar Thanks to Rajinikanth
PT Selvakumar Thanks to Rajinikanth

கோரிக்கையை ஏற்று குரல் கொடுத்ததற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் PT செல்வகுமார்.

PT Selvakumar Thanks to Rajinikanth : கொரொனா வைரஸ் பாதிப்பின் காரணமாக தனித்திரு ” விழித்திரு” விலகி இரு ” என்று அனைவரும் சொன்னார்கள்.. ஆனால் ஏழையோடு இருங்கள் என்று கடந்த 40 நாட்களாக ஏழை எளிய மக்களுக்கு தினமும் ஒரு உதவி செய்து டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையை கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி வந்தோம்.

இந்த நேரத்தில் தான் இரண்டு நாட்களுக்கு முன்பாக கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக மனது கேட்காமல் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தோம். ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று அந்த கோரிக்கையில் முன்வைத்தோம்.

விஜய் ஒரு பக்கம் ரூபாய் 1.30 கோடி நிதியளிக்க, மற்றொரு பக்கம் ஆதரவற்றவர்களுக்கு உணவளித்து பசி போக்கிய விஜய் மகளிர் மக்கள் இயக்கம் – வைரலாகும் புகைப்படங்கள்.!

உடனடியாக அந்தக் கருத்தை பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டு மக்கள் மீது அக்கறை கொண்டு அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது மீண்டும் திறந்தால் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விடுங்கள் என்று ரஜினி தற்போது அறிக்கை வெளியிட்டது மனதிற்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இப்படி ஒரு சூப்பர் ஸ்டாரை தான் தமிழக மக்கள் எதிர்பார்த்தோம். அவருடைய வார்த்தைக்கு வலுவும் ஆட்சியை மாற்றும் வல்லமையும் உண்டு என்பது நமக்குத் தெரியும்.

அவருடைய ரசிகர்கள் சார்பாகவும் ஏழை எளிய மக்கள் சார்பாகவும் நானும் அவருக்கு கோடான கோடி நன்றியை கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

கலப்பை நிறுவன தலைவர் PT செல்வகுமார்.