வடபழனி ஏவிஎம் பார்க் குடியரசு தின விழாவில் பங்கேற்று கொடியை ஏற்றி வைத்து விட்டு பேசிய கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் PTசெல்வகுமார் அவர்கள் நாம் அனைவரும் இந்தியர்கள் என்று சொன்னாலும் ஜாதி மதத்தால் நாம் பிளவுபட்டு உள்ளோம்..
இந்த ஒற்றுமையை வலியுறுத்துவதன் விதமாக நாம் ஒவ்வொருவரும் இருக்கும் தெருக்களில் எந்த மதத்தையும் பிரிவினை பார்க்காமல் நாம் அனைவரும் சகோதரத்துவத்துடன் பழக வேண்டும்.. நமக்குள் ஒரு அமைதி அன்பு எப்போதும் விளங்க வேண்டும். நாளைய இளைஞர்களே சமூக சகோதரத்துவ ஒற்றுமையோடு நாம் உருவாக்குவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.. வெறும் குடியரசு தினம் என்று சொல்லி எந்த புரோஜனம் இல்லை.. உண்மையிலேயே நமக்கு குடியரசு தினத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்றால் நாம் அனைவருக்கும் எந்த பிளவும் இல்லாமல் இளைஞர்களுக்கு ஜாதி மதத்தை திணிக்காமல் நமக்காக அரும்பாடுபட்டு தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்து குடியரசு தினத்தை வாங்கித் தந்த வீரர்கள் கனவுகளை நாளைய இளைஞர் சமுதாயத்தை வைத்து சரித்திரமாக மாற்றுவோம் .. இளைஞர்களுக்கு சமத்துவ விதையை விதைப்போம்.. சமத்துவம் பூக்களாய் மலரட்டும்???????? என்று பேசினார்..