PT Selvakumar Helps to School Childrens : காமராஜர் பிறந்த தின விழாவை கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் குமரி மாவட்டம் பகுதிகளிலும் பொட்டல்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஏழை மாணவ மாணவிகள் 500 பேருக்கு அரிசி மூட்டைகள் தென்னங்கன்றுகள் மற்றும் பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது. சிறந்த ஆசிரியர்கள் 51 பேருக்கு கலப்பை சான்றிதழ்களும் நல்லாசிரியர் விருதும் அளித்து கவுரவிக்கபட்டது.
பின்னர் மாணவர்கள் முன்னிலையில் PT செல்வகுமார் பேசியதாவது ; ஒரு மாணவனை சிறந்த முறையில் உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்களிப்பு போற்றக்கூடியது. தன்னிடம் படித்த மாணவனின் வளர்ச்சியை கண்டு பெருமையும் மகிழ்ச்சியும் கொள்வது இந்த ஆசிரியப்பெருமக்கள் தான்.
கரோனா வைரஸ் குறித்து ரஜினிகாந்த் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்…!
சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கல்வி கண் திறந்த காமராஜர் பிறந்த நாளில் நல்லாசிரியர் விருதுகளும், சான்றிதழ்களும் கலப்பை மக்கள் சார்பில் வழங்கினோம். ஓகி புயல் குமரியை அசுரத்தனமாக பேரழிவை ஏற்படுத்திய போது கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 50000 தென்னங்கன்றுகளை குமரியில் வைத்து வழங்கினோம்.
இன்று ஆசிரியர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் 500 தென்னங்கன்றுகளை வழங்கியது கூட குமரியை பசுமையான மாவட்டமாக மாற்றுவது தான் கலப்பை மக்கள் இயக்கத்தின் முதல் நோக்கம். இன்று அமெரிக்காவில் சிறந்த நேர்மையான ஆட்சி செய்த முதலமைச்சர்களில் முதல் இடத்தை நம்முடைய ஏழைப்பங்காளன் காமராஜர் அவர்களுக்கே வழங்கியது.
மறைந்தும் அவருடைய புகழை உலக நாடுகள் கொண்டாடி வருகிறது. காமராஜரின் சிந்தனையும் அறிவையும் மாணவர்கள் முன்னுதாரமாக எடுத்து கொள்ள வேண்டும் என்று பேசினார்.