PT Selvakumar Helps to Rajagai People : தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஏழை எளிய மக்கள் தங்களுடைய அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் PT செல்வகுமார் அவர்களின் தலைமையில் சென்னை கேளம்பாக்கத்தில் உதவியே பெற முடியாமல் தவிக்கும் மொழி பேச தெரியாத பர்மா அகதிகளுக்கும் ,கட்டிட தொழிலாளர்களுக்கும் ,தெலுங்கு மொழி பேசுபவர்களுக்கும் வட இந்தியர்களுக்கும் 250 மூட்டை அரிசிகளும் மளிகை சாமான் பொருட்களும் கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் PT செல்வகுமார் நேரடியாக சென்று உதவி அந்த மக்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தினார்.
விஜய்க்கு அக்கறை இருக்கு ஆனால் ரஜினிக்கு? – விஜய் பட தயாரிப்பாளர் ஆவேச பேட்டி.!
இதனையடுத்து தற்போது சென்னையில் இருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு வர முடியாத சூழலிலும் இயக்குனரும் தயாரிப்பாளருமான PT செல்வகுமார் அவர்கள் எப்படியாவது ரஜகிருஷ்ணாபுரம் ஏழை எளிய மக்களுக்கு உதவிட வேண்டும் என்ற நோக்கத்தில் 100 மூட்டை அரிசிகளை வழங்கினார். இந்த நற்காரியத்தை பங்கு தந்தை அமல்ராஜ் அவர்கள் தொடங்கி வைத்ததோடு ,பங்கு பேரவை துணை தலைவர் விட்மன் மற்றும் பழவூர் காவல் துறை ஆய்வாளர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
இந்த அருமையான புண்ணியமான செயலை முன்னின்று செய்த செல்வதாஸ் , ஆரோக்கியம், வினோத் லால் மற்றும் பங்கு பேரவை நண்பர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.இது போன்ற நற்பணிகள் தொடர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமே ! ஒன்றுபடுவோம் !🙏நல்லதை நினைப்போம் !🤝நல்லதை செய்வோம் என கூறினார் பி.டி செல்வகுமார்.