PT Selvakumar Comment on Jyothika Speech
PT Selvakumar Comment on Jyothika Speech

ஜோதிகாவின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து புலி பட தயாரிப்பாளரான பிடி செல்வகுமார் அவரது கருத்தை பதிவு செய்துள்ளார்.

PT Selvakumar Comment on Jyothika Speech : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜோதிகா. இவர் தஞ்சை பெரிய கோவில் பற்றி பேசிய பேச்சு பெரும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.

கோவிலை பராமரிப்பது போலவே மருத்துவமனைகளில் பள்ளிகளில் பராமரியுங்கள். உண்டியல் காசு போடுவது போல இதற்கும் செலவு செய்யுங்கள் என ஜோதிகா கூறியது மதம் சார்ந்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜோதிகாவின் பேச்சை வைத்து பலரும் அரசியல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து புலி பட தயாரிப்பாளரான பிடி செல்வகுமார் அவர்கள் அவரது கருத்தை பதிவு செய்துள்ளார்.

இனி கோயிலைப் பற்றி பேசினால் நாக்கை அறுப்போம் – ஜோதிகாவை எச்சரிக்கும் அரசியல் பிரமுகர், வைரலாகும் சர்ச்சைக்குரிய வீடியோ.!

சமீப காலமாகத்தான் மதம் சார்ந்த பேச்சுக்கள் அதிகமாகி உள்ளன. தமிழர்கள் இப்படியானவர்கள் இல்லை. அமைத்து மதத்தாருடனும் ஒற்றுமையாக வாழ்ந்து வருவார்கள்.

ஜோதிகா முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் இதுவரை எந்த இடத்தில் எப்போது மதத்தைப் பற்றிப் பேசியதும் இல்லை பிரிவினை பற்றி அவர் பேசியதும் இல்லை.

பிரதமர் நரேந்திர மோடி கூட ஒருமுறை கோவில்களை கட்டுவதைவிட கழிவறைகளை கட்டுங்கள் என கூறியிருந்தார்.

தற்போது ஜோதிகா பேசியதும் அப்படி எதார்த்தமான ஒன்றாக தான் இருக்கும். அதை வைத்து மதச்சாயம் பூசி விமர்சனம் செய்யாதீர்கள். தற்போது உள்ள சூழ்நிலையில் இதுபோன்ற வெறுப்பு விவாதங்கள் வேண்டாம்
எனக் கூறியுள்ளார்.

மதவெறி, சாதிவெறிகளை குப்பையில் தூக்கி போட்டுவிட்டு மனிதநேயத்துடன் சகோதரத்துவத்துடனும் இருக்க வேண்டிய நேரமிது எனவும் PT செல்வகுமார் கூறியுள்ளார்.

YouTube video