காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கும் பொன்னியின் செல்வன் நடிகையின் தகவல் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சோபிதா துலிபாலா. மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து அனைவருக்கும் பரிச்சயமான இவர் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து வருவதாக வெளியான வதந்தி குறித்து முதல்முறையாக மனம் திறந்து பகிர்ந்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது. அதாவது, ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சோபித்த அதில் பேசிய போது, ‘என் கேரியர் மீது தான் எனக்கு கவனம் இருக்கிறது. எதுவும் தெரியாமல் பேசுபவர்களுக்கு நான் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன். நான் எந்த தவறும் செய்யாத நிலையில் எந்த விளக்கமும் அளிக்க அவசியமில்லை’ என்று தெரிவித்திருக்கிறார்.