விஜயை வைத்து படம் இயக்கிய அட்லீ படத்தை தயாரிக்க தயாரிப்பார்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
Produers Avoid Atlee Story : தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்த இவர் தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளார்.
இருப்பினும் அட்லியை வைத்து படத்தை தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதற்கான காரணம் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது. அதாவது பொதுவாகவே அட்லி ஆரம்பத்தில் ஒரு பட்ஜெட்டை சொல்லி படத்தை தொடங்குவார். அதாவது அட்லீ பட்ஜெட்டை கூறி படத்தை துவங்கி பின்னர் படத்தின் பாதியில் பட்ஜெட்டை இழுத்து விடுகிறார்.
அவர் இயக்கிய நான்கு படங்களுக்கும் இதே நிலைதான். இதன்கரணமாகவே அட்லியை வைத்து படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
இவர் அடுத்ததாக நடிகர் ஷாருக்கனை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் அந்த படம் பற்றியும் எந்தவித தகவலும் வெளிவராமல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.