தயாரிப்பாளர் சங்கத்திற்கு ரஜினி கொடுத்த உதவியை பல தயாரிப்பாளர்கள் நிராகரித்துள்ளனர்.
Producers Comments on Rajinikanth Help : கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் பலர் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சினிமா துறையிலும் பத்திரிக்கையாளர்கள், தயாரிப்பாளர்கள், ஊழியர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் உதவி வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் உதவி வந்தார்.
நலிவடைந்த தயாரிப்பாளருக்கும் உதவுமாறு தயாரிப்பாளர் கே ராஜன் ரஜினிகாந்திற்கு கடிதம் எழுதியதைத் தொடர்ந்து அவர் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்திருந்தார்.
நலிவடைந்த பல தயாரிப்பாளர்கள் இந்த நிவாரணத்தை பெற்றுக் கொண்ட நிலையில் சில தயாரிப்பாளர்கள் இதனை வாங்க மறுத்துள்ளனர்.
மேலும் நடிகர்களுக்கு சம்பளம் தரும் முதலாளிகளான தயாரிப்பாளர்களுக்கு நடிகர்கள் நிவாரணம் கொடுப்பதா? இது தங்களின் தன்மானத்திற்கு பெரிய அசிங்கம்.
அப்படியே கொடுப்பதாக இருந்தால் பொருட்களாக கொடுக்கலாம் தயாரிப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஐம்பதாயிரமோ ஒரு லட்சமோ கொடுத்து இருக்கலாம்.
இல்லையென்றால் குறைந்த சம்பளத்தில் அவர்களுக்கு கால்சீட் கொடுத்து ஒரு படத்தில் நடித்துக் கொடுத்து இருக்கலாம் என கூறி வருகின்றனர்.
மேலும் தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் ரஜினி கொடுத்திருப்பது அவருடைய பெருந்தன்மையை காட்டினாலும் தயாரிப்பாளர்கள் இதனை வாங்குவது தன்மானத்துக்கு ஏற்படும் இழுக்கு எனக் கூறியுள்ளார்.