அண்ணாத்த ரிலீஸின்போது கொரானா இல்லையா என தமிழக அரசின் புதிய கட்டுப்பாட்டுக்கு தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Producers Against on New Rule of Tamilnadu : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் அண்ணாத்த. இந்த படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அண்ணாத்த பட ரிலீசுக்கு முன்புவரை 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் தீபாவளி முதல் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் அண்ணாத்த திரைப்படம் 100 சதவீத இருக்கை அனுமதியோடு வெளியானது.

இந்த நிலையில் இனி திரையரங்குகள், உட்பட பொது இடங்களில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியவர்களுக்கு மட்டும் தான் அனுமதி அளிக்க வேண்டும் என்று புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இதற்கு தயாரிப்பாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழக கிரிக்கெட் அணிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு

அண்ணாத்த திரைப்படம் வெளியானபோது ஏன் இந்த கட்டுப்பாடு கொண்டு வரப்படவில்லை? அப்போது கொரானா தொற்று இல்லாமல் போய்விட்டதா? மாநாடு படத்தின் ரிலீஸின் போது மட்டும் ஏன் இந்த கட்டுப்பாடு என சுரேஷ் காமாட்சி கேள்வி எழுப்பியுள்ளார்.

Ajith உடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல இயக்குனர் – Massive Update.! | Valimai | Latest News | HD

இவர் மட்டும் அல்லாமல் பல்வேறு தயாரிப்பாளர்கள் இந்த கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். தயாரிப்பாளரின் கோரிக்கையை ஏற்று இந்த கட்டுபாடு நீக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.