பாலிவுட்டில் சுஷாந்த் சிங்குக்கு நடந்த கொடுமைகள் தமிழ் சினிமாவில் ஒரு நடிகருக்கு நடந்ததாக தயாரிப்பாளர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
Producer Ravindhar About Sivakarthikeyan : இந்தியத் திரையுலகில் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் சுஷாந்த் சிங்.
திறமையான நடிகராக வலம் வந்த இவர் பாலிவுட் சினிமாவில் வாரிசு நடிகர், நடிகைகள் கொடுத்த டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் பாலிவுட் சினிமாவில் இவருக்கு நடந்தது பல தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இதேபோல பல்வேறு கொடுமைகள் நடந்ததாக தயாரிப்பாளர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
தொகுப்பாளராக இருந்து சினிமாவில் நடிக்க வந்த சிவகார்த்திகேயன் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தார். ஆனால் அவர் இதை சரியான விதத்தில் கையாண்டதால் அவற்றையெல்லாம் மீண்டு இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிக்க வந்த புதிதில் மேடையில் எதுக்கு இவ்வளவு தொந்தரவு கொடுக்கிறீர்கள் என கண் கலங்கி அழுதார் என்பதால் ரவீந்திரன் சொல்வது உண்மையாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.