நடிகர் ஜெய் பற்றி பலூன் பட தயாரிப்பாளர் பரபரப்பான குற்றசாட்டை முன் வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெய். இவரது நடிப்பில் ஸ்ரீனிஷ் இயக்கத்தில் பலூன் திரைப்படம் வெளியாகி தோல்வியை சந்தித்தது.
இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அஞ்சலியும் ஜனனி ஐயரும் நடித்திருந்தனர். நீண்ட காலமாக ஜெய்யும் அஞ்சலியும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தன.
ஆனால் அஞ்சலி எங்களுக்கு இடையில் காதல் இல்லை என கூறி வந்தார். இந்நிலையில் தற்போது பலூன் படத்தின் தயாரிப்பாளர் போஸ்டர் நந்தகுமார் பலூன் படத்தின் டப்பிங்கின் போது ஜெய் எங்களை படாதபாடு படுத்தி விட்டதாக கூறியுள்ளார்.
அஞ்சலியை இயக்குனர் ஸ்ரீனிஷ் பெயர் சொல்லி அழைத்து விட்டதால் ஒரு பிரச்சனை செய்து விட்டார், மறுநாள் சொல்லாமல் கொள்ளாமல் அஞ்சலியை அழைத்து கொண்டு சென்னை சென்று விட்டார் என கூறியுள்ளார்.
மேலும் தனக்கு 5 ஸ்டார் ஓட்டலில் தான் ரூம் வேண்டும் என கூறி ரூமை புக் செய்து விட்டு எந்நேரமும் அஞ்சலி ரூமில் தான் இருப்பார். ரூமை கேன்சல் செய்து விடலாமா என கேட்டாலும் வேண்டாம் என கூறி வீண் செலவை இளித்து விடுவார்.
ஜெய்யால் தான் இந்த படம் தோல்வியை சந்தித்தது என கூறியுள்ளார்.