பிரபல தயாரிப்பாளர் டில்லி பாபு காலமாகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் குற்றம் குற்றமே, கள்வன், மிரல்,ராட்சசன், பேச்சுலர், ஓ மை கடவுளே போன்ற பல படங்களை தயாரித்தவர் டில்லி பாபு.

சில மாதங்களாக உடல்நலம் சரியில்லாத காரணத்தால் மரணம் அடைந்துள்ளார். இவரின் இந்த இழப்பு தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தன் மகனை ஹீரோவாக வைத்து வளையம் என்ற படத்தை தயாரித்து வந்த இவர் படம் முழுமையாக முடியும் முன்பே காலமானார்

ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என அனைவரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.