தமிழக முதல்வருக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
Producer Council Request to Chief Minister : கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
அதிலும் குறிப்பாக சென்னை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மாநகரம் முழுவதும் சிவப்பு நிற பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இன்று முதல் சில தளர்வுகள் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. இதனால் சினிமா துறையைச் சேர்ந்த தயாரிப்பாளர் சங்கம் முதல்வருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில் திரைப்படத்துறையில் படப்பிடிப்புக்கு அனுமதி தரவில்லை என்றாலும் குறைந்த அளவிலான ஆட்களைக் கொண்டு நடைபெறும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கு அனுமதி தருமாறு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
மேலும் இந்த பணிகளில் மத்திய மாநில அரசுகள் சொல்லும் சோசியல் டிஸ்டன்ஸிங் போன்றவற்றை கடுமையாக பின்பற்றுவோம். சானிடைசர் போன்றவைகளை பயன்படுத்துவோம் எனவும் உறுதி அளித்ததாகவும் அந்த கடிதத்தில் கூறியுள்ளது.
இதற்கு முதல்வரிடமிருந்து என்ன பதில் வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.