இயக்குனர் அட்லீக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ரெட் கார்டு கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் கசிந்துள்ளது.
Producer council decide Red card to director atlee – ராஜா ராணி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் சிஷ்யரான இவர் ஷங்கரைப் போலவே அதிகமான பட்ஜெட்டில் திரைப்படங்களை இயக்கி வருகிறார்.
ஆனால், கூறிய பட்ஜெட்டைவிட அதிக செலவை இவர் இழுத்து விடுவதாக தொடர்ந்து இவர் மீது புகார் இருந்து வருகிறது.
மாற்றுத்திறனாளி பாடகருடன் சிவகார்த்திகேயன்… இமான் எடுத்த செல்பி… வைரலாகும் புகைப்படம்
விஜயை வைத்து இவர் இதற்கு முன்பு இயக்கிய தெறி, மெர்சல் ஆகிய இரண்டு படங்களிலும் கூறிய பட்ஜெட்டை விட பல கோடி அதிக பட்ஜெட்டில் படத்தை முடித்ததால் தயாரிப்பாளர்களுக்கு எந்த லாபமும் கிடைக்கைவில்லை எனக்கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து ஒன்றுகூடி பேசிய தயாரிப்பாளர்கள் சங்கம் அட்லிக்கு ரெட் கார்டு கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக செய்திகள் கசிந்துள்ளது.
அப்படி செய்துவிட்டால் அட்லீ தமிழில் திரைப்படங்களை இயக்க முடியாத நிலை உருவாகும்.
விஜய்யை வைத்து அவர் இயக்கிய ‘பிகில்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
இப்படத்திலும் கூறிய பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அவர் பட்ஜெட்டை உயர்த்தி விட்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.