பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் பிரியங்கா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொடங்கியுள்ளார்.
Priyanka in Show After BB5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார் தொகுப்பாளினி பிரியங்கா. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் கலவையான விமர்சனங்களை சந்தித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது மீண்டும் தொகுப்பாளினியாக பயணத்தை தொடர உள்ளார் பிரியங்கா. ஆமாம் அடுத்த வாரம் முதல் ஒளிபரப்பாக உள்ள சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி மாகாபா உடன் இணைந்து தொகுத்து வழங்குகிறார். இந்த செட்டில் பின்னணி பாடகி பிரியங்காவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.