தொகுப்பாளினி பிரியங்கா அவருடைய கணவரை பிரிந்து விட்டதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
Priyanka Divorce Her Husband : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர் பிரியங்கா. இவர் அதே தொலைக்காட்சியில் பணியாற்றிய வரை பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஒரு முறை கூட தன்னுடைய கணவரை பற்றி பேசவில்லை. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர் தன்னுடைய கணவரை சென்று பார்த்ததாக தெரியவில்லை. கணவர் வீட்டுக்கு செல்லாமல் நேராக தன்னுடைய தாயார் வீட்டுக்கு தான் பிரியங்கா சென்றிருந்தார்.
இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த சமயத்தில்தான் பிரியங்காவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. தன்னுடைய கணவரை விட பணம் புகழ் என இரண்டிலும் பிரபலம் ஆகி விட்டதால் அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துவிட்டார் பிரியங்கா.
இவர்களின் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது என அடுக்கடுக்கான அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளார் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன். ஆனால் இவர் சொல்லும் தகவல்கள் அத்தனையும் அப்படியே உண்மை இல்லை என்பதால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.