விஜய் டிவியை விட்டு விலக முடிவு செய்துள்ளார் தொகுப்பாளினி பிரியங்கா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய ரசிகர்கள் மத்தியில் சிறந்த தொகுப்பாளராக இடம் பிடித்திருப்பவர் பிரியங்கா. தொகுப்பாளினியாக தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் இவர் வீடியோ ஒன்று தற்போது 30 வயதாகிவிட்டது, வயதானவர் போல ஃபீலிங் வருகிறது. ஆகையால் தொலைக்காட்சி சேனலை விட்டு விலகி ஒரு பேட்டி எடுக்கலாம் என நினைத்ததாக தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்ட பாலா, மைக் பிடித்தவர்கள் எல்லாம் ஆங்கரிங் செய்துவிட முடியாது. மைக்கிற்கு உங்களை பிடிக்க வேண்டும். நீங்களும் அப்படி மைக்கிற்கு பிடித்த ஆள்தான். ஆகையால் நீங்கள் நினைத்தாலும் உங்களால் இதிலிருந்து விலக முடியாது என தெரிவித்துள்ளார். மேலும் பிரியங்காவின் முடிவை மாற்றிக் கொள்ளுமாறு அவர் அறிவுரை கூறியுள்ளார்.
பிரியங்கா விஜய் டிவியை விட்டு விலகி பிரேக் எடுக்க முடிவு செய்திருந்த தகவலைக் கேட்டு அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.