PriyaMani Movie : தமிழில் பாரதிராஜாவின் கண்களால் கைது செய் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பிரியாமணி.
பருத்துவீரன் படத்தில் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்திய இவர் அதற்காக தேசிய விருதை கைப்பற்றினார்.
ஆனால் தொடர்ந்து இவருக்கு தமிழில் வாய்ப்புகள் குறைந்தன. பாலுமகேந்திரா, மணிரத்னம் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த போதிலும் இவரால் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இணைய முடியவில்லை.
சுனைனாவும் கமிட்டடா? – இவர் தான் காதலரா? – முதல் முறையாக வெளியான புகைப்படம்.!
வாய்ப்புகள் குறையவே கடந்த 2017-ம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கிய பிரியாமணி, தற்போது மீண்டும் தென்னக மொழிகளில் சில படங்களில் நடித்து வருகிறார்.
இதுபோக வொயிட் என்ற குறும்படத்திலும் இவர் கண் பார்வையற்றவராக நடிக்கிறார்.
கண்தானம் குறித்த விழிப்புணர்வு படமாக உருவாகும் இப்படத்தில் ஒரு நாய்க் குட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. இதுபோக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் இப்படத்திற்கு வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார்.