ப்ரியா பவானி ஷங்கருக்கு நேர்ந்த தொல்லையால் அவரே கடுப்பாகி ட்வீட் செய்துள்ளார். அப்படி என்ன விசியம் தெரியுமா?
Priya Bhavani Shankar : தமிழ் சின்னத்திரையில் சீரியல் மூலமாக பிரபலமானதை தொடர்ந்து வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ப்ரியா பவானி ஷங்கர்.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் என இரண்டு வெற்றி படங்களில் நடித்து விட்டார்.
இவருடைய பெயரில் ட்விட்டரில் ஒரு போலி கணக்கு ஒன்று உலா வருகிறது. இதில் அதிர்ச்சிக்குரிய விசியம் என்னவென்றால் ப்ரியா பவானி ஷங்கரை வெறும் 76 ஆயிரம் பேர் தான் பின் தொடர்கின்றனர்.
பிராடு பசங்க, சும்மாவே கிளப்பறாங்க – தளபதி 64 குறித்து பேசிய ப்ரியா பவானி ஷங்கர்.!
ஆனால் அவருடைய பெயரில் உள்ள போலிக்கணக்கை 497 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர். இதனை கண்டு அதிர்ச்சியான ப்ரியா பவானி ஷங்கர் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அந்த டீவீட்டில் என்னை விட நீங்கள் பொறுப்பாக உள்ளீர்கள். ஆனால் மணிக்கு ஒரு முறை போஸ்ட் செய்து என்னை எரிச்சலாக்காதீர்கள் என கூறியுள்ளார்.
அவரின் கோபத்தை பார்த்த நெட்டிசன்கள் முதலில் உங்கள் கணக்கை அதிகாரபூர்வ கணக்காக மாற்றுங்கள் என அட்வைஸ் செய்து வருகின்றனர்.
Dear fake profile! I understand your excitement and responsibility in posting something. But pls don’t make it as your duty to embarrass me in an hourly basis. Thanks but no thanks ???????? https://t.co/teO1K1VC6w
— Priya BhavaniShankar (@priya_Bshankar) May 20, 2019