நடிகை பிரியா பவானி சங்கர் சொந்தமாக உணவகம் ஒன்றை திறக்கப் போவதாக பதிவின் மூலம் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் திரையுலகில் பிரபலம் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். மேயாத மான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தவிர்க்க முடியாத நடிகையாக இடம் பிடித்திருக்கிறார். தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் இவர் எப்போதும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து பலவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவார்.

ஆனால் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய உணவகம் குறித்து வீடியோ ஒன்றை பகிர்ந்து எமோஷனலான பதிவை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது. அதில் “அவர், எங்கள் சொந்த உணவகம் இது, எப்போதும் கனவாக இருந்த நாள் தற்போது நெருங்கி வருவதால் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறேன். எங்கள் கனவுக்கு உயிர் கொடுத்துள்ளோம். உங்களுக்கு பரிமாற காத்திருக்கிறோம்”. என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.