மனசு நிறைய ஒரே வேண்டுதலோடு இறைவனை வேண்டினேன் ஆனால் அவர் கைத்தட்டி சிரித்தார் என தன்னுடைய வேதனையை பதிவிட்டுள்ளார் பிரியா பவானி சங்கர்.
Priya Bhavani Shankar Emotional Memories : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல் மூலமாக பிரபலமானவர் பிரியா பவானி சங்கர்.
வெள்ளித்திரையில் மேயாத மான் படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
நாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சித்ரா பவுர்ணமி நிலவு புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய வலியை கொட்டித் தீர்த்துள்ளார்.
என்ன மன்னிச்சிடுங்க தல ரசிகர்களே.. அஜித்தின் பிறந்த நாளில் சாந்தனு பதிவிட்ட ட்வீட் – காரணம் என்ன?
இது குறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில் கடந்த வருடம் இதே நாள் சித்ரா பவுர்ணமியில் கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும் என என் நண்பன் சொன்னதை நம்பி கிரிவலம் சென்றேன்.
ஆனால் கடவுள் நினைத்ததை தரவில்லை கைதட்டி சிரித்தார். இரண்டு சித்ரா பௌர்ணமிக்கும் எவ்வளவு மாற்றம்.
எனக்கு மட்டுமல்ல அனைவரும் தனிமைப்பட்டு கிடக்கிறோம். கிடைத்ததை கைகளால் பற்றிக்கொண்டு கிடைத்த தோளில் சாய்ந்து கொண்டு இருக்கிறோம் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.