ஆபாச படங்களை கல்லூரி பருவத்திலேயே பார்த்து விட்டதாக நடிகை பிரியா பவானி சங்கர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவில் நடிக்க வந்தவர் பிரியா பவானி சங்கர். மேயாதமான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்துள்ளார். தற்போது மாபியா, இந்தியன் 2 ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார். குடும்ப குத்துவிளக்காக அழகான தோற்றத்தில் காட்சியளிக்கும் அவருக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு.
சமீபத்தில் அவர் ஒரு பேட்டி கொடுத்தபோது தொகுப்பாளினி ‘அது மாதிரியான படங்களை பார்த்து இருக்கிறீர்களா?’ என கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த பிரியா பவானிசங்கர் ‘அந்த மாதிரியான படங்களை எல்லோரும் பார்த்திருப்பார்கள். எனக்கு 18 வயது இருக்கும். கல்லூரி விடுதியில் தங்கியிருந்தேன். கல்லூரியில் பெரும்பாலான பெண்கள் அப்போது இல்லை.
அப்போது என் சீனியர் அக்கா ஒருவர் என் அறிவுக்கண்ணை திறப்பதாக கூறி அது மாதிரியான திரைப்படத்தை காண்பித்தார்’ என அந்த பேட்டியில் கூறினார். வெளிப்படையாக அவர் பேசியது பலருக்கு பிடித்திருந்தாலும், அவரை குடும்ப குத்துவிளக்காக பார்த்து மனதில் பிம்பத்தை உருவாக்கிக் கொண்டவர்கள் அவரை திட்டியும் கருத்துகளை கூறி வருகின்றனர்.