Priya Anand going to do next : தமிழ் சினிமாவில் வேகமாக வளரும் நடிகையாக பெயர் பெற்றவர் பிரியா ஆனந்த். எதிர்நீச்சல் படத்தின் வெற்றிக்குப்பின் இவர் முன்னணி நடிகையாகி விடுவார் என்றே பலரும் ஆருடம் சொன்னார்கள். ஆனால் நடந்ததோ வேறு.
தவறான படத் தேர்வுகளால் பிரியா ஆனந்த் ஒருகட்டத்தில் ஆளே காணாமல் போனார். இந்த நிலையில்தான் அண்மையில் வெளியான எல்.கே.ஜி அவரை மீண்டும் லைம் லைட்டுக்கு கொண்டுவந்தது.
பிக் பாஸ் யாஷிகா ஆனந்த் தற்கொலை? – நடிகையை பதற வைத்த பிரபல பத்திரிகை.!
அதன்பின் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பிரியா ஆனந்த் மீண்டும் ஒரு அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளார்.
அடுத்ததாக இவர் வலைத் தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளாராம். பிரபல ஜீ நிறுவனம் தயாரிக்கும் இத்தொடர் இந்தியளவில் பல மொழிகளில் வெளியாகவுள்ளதாம்.
இது ஒருபக்கம் இருக்க ஆதித்ய வர்மா படத்தில் சர்ச்சைக்குரிய ஒரு கதாபாத்திரத்திலும் பிரியா ஆனந்த் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.