President to visit Kancheepuram Today :
காஞ்சீபுரம்: காஞ்சீபுரத்தில் உள்ள அத்தி வரதரை தரிசிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று காஞ்சீபுரம் வருகிறார்.
அவரது வருகையையொட்டி இன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை பொது தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த 1- ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு சயன திருக்கோலத்தில் காட்சியளித்து வருகிறார். நேற்று 11-வது நாளாக அத்திவரதர் காவி நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அவரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் அத்தி வரதரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோருடன் வந்து அத்திவரதரை தரிசனம் செய்தார்.
அவரது மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் மித்ரன் திரைப்படம் வெற்றி பெறவேண்டி படப்படிப்பிற்கான கிளாப் போர்ட்டை அத்திவரதரின் பாதத்தில் வைத்து பூஜை செய்தார் விஜயகாந்த் அவர்கள்.
இவ்வாறு சினிமா பிரபலங்கள் வருகை தருகையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 3 மணி அளவில் அத்திவரதரை தரிசனம் செய்ய காஞ்சீபுரம் வருகிறார்.
அவரது வருகையையொட்டி, காஞ்சீபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அவரது வருகையையொட்டி இன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை பொது தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று அத்திவரதரை தரிசனம் செய்த பிறகு நாளை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக நேற்று அத்திவரதரை பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. மாநிலத்தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, நடிகர் மயில்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.